''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
விஷால் நடித்துள்ள லத்தி படம் நாளை (டிச.,22) தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. படத்திற்காக கடந்த ஒரு வாரமாக பல ஊர்களுக்கு சென்று புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பதி சென்ற விஷால் அங்குள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த கேள்வி பதில் பகுதியின் சில...
கேள்வி: உங்களை கவர்ந்த அரசியல் தலைவர் யார்?
பதில்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
கேள்வி: வருகிற தேர்தலில் குப்பம் தொகுதியில் போட்டியிடுவீர்களா?
பதில்: குப்பம் பகுதியில் எங்கள் குடும்பத்தின் கிரானைட் குவாரி உள்ளது. அந்த பகுதியை நான் நன்கு அறிவேன். அதற்காக குப்பம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என நினைத்தது இல்லை. அரசியலுக்கு வந்துதான் ஒருவர் சேவை செய்ய வேண்டும் என்பது இல்லை. நான் தற்போது சினிமாவில் நடிப்பதையே மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்கிறேன்.
கேள்வி: உங்களுக்கு எம்.எல்.ஏ ஆகும் ஆசை இல்லையா?
பதில்: ஒரு எம்.எல்.ஏ எவ்வளவு சம்பாதிக்கிறாரோ அதைவிட எனது படங்கள் மூலம் நான் அதிகம் சம்பாதிக்கிறேன். ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு இருக்கும் புகழை விட எனக்கு அதிக புகழ் இருக்கிறது.
கேள்வி: நீங்கள் அரசியல்வாதியா, இல்லையா?
பதில்: சமூக சேவை செய்கிற எல்லோருமே அரசியல்வாதிகள்தான். கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் மட்டும் அரசியல்வாதிகள் அல்ல.
கேள்வி: வருங்காலத்தில் அரசியலில் குதித்தால் எந்த மாநில அரசியலில் குதிப்பீர்கள்?
பதில்: கண்டிப்பாக ஆந்திர அரசியலுக்கு வரமாட்டேன்.