ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
கடப்பா : திருப்பதிக்கு மகள் ஐஸ்வர்யா உடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்த நடிகர் ரஜினிகாந்த், பின்னர் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உடன் கடப்பாவில் உள்ள அமீன் தர்காவிற்கு சென்று வழிபாடு செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இருதினங்களுக்கு முன் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினி, நேற்று இரவு திருப்பதி சென்றார். அங்கு டி.எஸ்.ஆர் விருந்தினர் மாளிகையில் தங்கினார். தொடர்ந்து இன்று(டிச., 15) அதிகாலை சுப்ரபாத சேவையில் திருப்பதி ஏழுமலையானை மகள் ஐஸ்வர்யா உடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் மதியம் 12மணியளவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள புகழ்பெற்ற அமீன் தர்காவிற்கு சென்றார் ரஜினி. அவருடன் மகள் ஐஸ்வர்யாவும் உடன் சென்றார். அங்கு தர்கா நடவடிக்கைகளை கேட்டு அறிந்து கொண்டவர் பின்னர் நடந்த பிரார்த்தனையிலும் பங்கேற்றார். ரஜினி, ரஹ்மான் வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.