மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

2016ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளியான படம் பிச்சைக்காரன். இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கப்பட்டு அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ரிப்பன் பில்டிங் மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற வளாகம், பார் கவுன்சில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி பெறாமல் ட்ரோன் மூலம் பிச்சைக்காரன்- 2 குழுவினர் படப்பிடிப்பு நடத்தி உள்ளார்கள். இதனால் நீதிமன்ற வளாகத்தில் இருந்த காவல் துறையினர் ட்ரோன்களை இயக்கிய சுரேஷ், நவீன் குமார், ரூபேஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்து அதன் பிறகு ஜாமீனில் விடுவித்துள்ளார்கள்.