லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

பாலிவுட்டின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் நடித்த தமிழன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் அதன்பின் பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக வளர்ந்தார். ஹாலிவுட் வரை சென்றவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து, வாடகைத் தாய் மூலம் குழந்தையும் பெற்றார். சினிமாவில் நடிகைகளுக்கு சம்பள விஷயத்தில் பாகுபாடு காட்டப்படுகிறது என குற்றம் சாட்டுகிறார் பிரியங்கா.
அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛எனது நிறத்தை வைத்து என்னை ‛கருப்பு பூனை' என கிண்டல் செய்தனர். சினிமாவில் ஆண் நடிகர்களுக்கே சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது. அவர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் மட்டுமே நான் பெற்றேன். நான் மட்டுமல்லாது பல நடிகைகளுக்கு இது இன்னமும் தொடர்கிறது. மேலும் படப்பிடிப்பில் நடிகைகள் நீண்டநேரம் காத்திருக்கணும், நடிகர்களுக்கு அப்படி இல்லை, நேரத்திற்கு வந்து செல்வர். ஹாலிவுட்டிலும் இந்த நிலை உள்ளது'' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.




