தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி | பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவதா ? நிதி அகர்வால் கமெண்ட் | ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் |

பாலிவுட்டின் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் விஜய் நடித்த தமிழன் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் அதன்பின் பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக வளர்ந்தார். ஹாலிவுட் வரை சென்றவர் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து, வாடகைத் தாய் மூலம் குழந்தையும் பெற்றார். சினிமாவில் நடிகைகளுக்கு சம்பள விஷயத்தில் பாகுபாடு காட்டப்படுகிறது என குற்றம் சாட்டுகிறார் பிரியங்கா.
அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛எனது நிறத்தை வைத்து என்னை ‛கருப்பு பூனை' என கிண்டல் செய்தனர். சினிமாவில் ஆண் நடிகர்களுக்கே சம்பளம் அதிகமாக வழங்கப்படுகிறது. அவர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் மட்டுமே நான் பெற்றேன். நான் மட்டுமல்லாது பல நடிகைகளுக்கு இது இன்னமும் தொடர்கிறது. மேலும் படப்பிடிப்பில் நடிகைகள் நீண்டநேரம் காத்திருக்கணும், நடிகர்களுக்கு அப்படி இல்லை, நேரத்திற்கு வந்து செல்வர். ஹாலிவுட்டிலும் இந்த நிலை உள்ளது'' என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.