பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

பாகுபலி திரைப்படத்தில் ஹீரோவுக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்த வில்லன் வேடத்தில் நடித்து தென்னிந்திய மொழி ரசிகர்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் நடிகர் ராணா. தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் விமானப்பயணம் மேற்கொண்ட ராணா ஹைதராபாத்தில் வந்து இறங்கியபோது தன்னுடைய லக்கேஜ் ஒன்று மிஸ் ஆனதை கவனித்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்த விமான ஊழியர்களிடம் கேட்டபோது அவருடைய லக்கேஜ் எப்படி மிஸ் ஆகி இருக்கக்கூடும் என்பது பற்றி கூட யாராலும் தகவல் சொல்ல முடியாமல் கையை பிசைந்துள்ளனர்.
இதுபற்றி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ராணா, இந்தியாவிலேயே மிக மோசமான விமான சர்வீஸ் என்று சம்பந்தப்பட்ட பிரபல விமான நிறுவனத்தை விமர்சித்துள்ளார். இதையடுத்து அந்த விமான நிறுவனம் ராணாவிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறியதுடன் விரைவில் மிஸ் ஆன அவரது லக்கேஜையும் கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்துள்ளது.




