ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் |
'நேரம், பிரேமம்' படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜ், நயன்தாரா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் தயாராகி இன்று வெளியாகியுள்ள படம் 'கோல்டு'. இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால், டப்பிங் வேலைகள் தாமதமான காரணத்தால் இன்று படம் வெளியாகாமல் போய்விட்டது.
காலை 8 மணிக்கு மலையாள மொழிக் காட்சிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவையும் ரத்து செய்யப்பட்டன. காலை 10 மணிக்குதான் முதல் காட்சி ஆரம்பமாகியுள்ளது. மலையாளத்தில் மட்டும் இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழில் நாளை வெளியாகும் எனத் தெரிகிறது. ஆன்லைன் டிக்கெட் பதிவு இணையதளங்களில் தமிழ் பதிப்பிற்கான இன்றைய முன்பதிவையும் ரத்து செய்துவிட்டனர்.
இப்படத்தின் தமிழக உரிமையை கோவை சுப்பையா என்ற வினியோகஸ்தர் சுமார் 1 கோடி கொடுத்து வாங்கியுள்ளாராம். சிம்பு நடித்த 'மாநாடு' படத்தின் தமிழக வெளியீட்டை செய்தவர் அவர்தான். இன்று படம் தமிழில் வெளியாகாத நிலையில் மலையாளப் படத்திற்கான விமர்சனம் மற்றும் வரவேற்பைப் பொறுத்தே நாளை வெளியாக உள்ள தமிழ்ப் பதிப்பிற்கான வரவேற்பும் இருக்கும்.