அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
'நேரம், பிரேமம்' படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்விராஜ், நயன்தாரா மற்றும் பலர் நடித்து மலையாளத்தில் தயாராகி இன்று வெளியாகியுள்ள படம் 'கோல்டு'. இப்படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால், டப்பிங் வேலைகள் தாமதமான காரணத்தால் இன்று படம் வெளியாகாமல் போய்விட்டது.
காலை 8 மணிக்கு மலையாள மொழிக் காட்சிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவையும் ரத்து செய்யப்பட்டன. காலை 10 மணிக்குதான் முதல் காட்சி ஆரம்பமாகியுள்ளது. மலையாளத்தில் மட்டும் இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழில் நாளை வெளியாகும் எனத் தெரிகிறது. ஆன்லைன் டிக்கெட் பதிவு இணையதளங்களில் தமிழ் பதிப்பிற்கான இன்றைய முன்பதிவையும் ரத்து செய்துவிட்டனர்.
இப்படத்தின் தமிழக உரிமையை கோவை சுப்பையா என்ற வினியோகஸ்தர் சுமார் 1 கோடி கொடுத்து வாங்கியுள்ளாராம். சிம்பு நடித்த 'மாநாடு' படத்தின் தமிழக வெளியீட்டை செய்தவர் அவர்தான். இன்று படம் தமிழில் வெளியாகாத நிலையில் மலையாளப் படத்திற்கான விமர்சனம் மற்றும் வரவேற்பைப் பொறுத்தே நாளை வெளியாக உள்ள தமிழ்ப் பதிப்பிற்கான வரவேற்பும் இருக்கும்.