Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உயர்ந்த மனிதன் கைவிடப்பட்ட போது கதறி அழுதேன் : எஸ்ஜே சூர்யா

28 நவ, 2022 - 06:09 IST
எழுத்தின் அளவு:
When-Uyarndha-manithan-movie-dropped-i-cried-says-SJ-Surya

நடிகர் எஸ்ஜே சூர்யா முதன்முறையாக வதந்தி என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். விக்ரம் வேதா பட புகழ் இரட்டை இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடரை கொலைகாரன் பட இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ளார். இவர் வாலி, குஷி ஆகிய படங்களில் எஸ்ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்த வெப் தொடர் வரும் டிசம்பர் இரண்டாம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. கிட்டத்தட்ட 240 நாடுகளில் உள்ளவர்கள்' இந்தத் தொடரைப் பார்க்க முடியும்.

தற்போது இந்த வெப் தொடரின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் எஸ்ஜே சூர்யா இதுபற்றி பேசும்போது, “ தமிழகத்தை தாண்டி இந்தியாவையும் தாண்டி உலக அளவில் செல்ல வேண்டும் என ஆசைப்பட்டேன். அது இந்த வெப் தொடர் மூலமாக, அதுவும் எனது உதவி இயக்குனர் மூலமாகவே நிறைவேறி இருப்பதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.

அதுமட்டுமல்ல கடந்த 2018ல் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு எஸ்ஜே சூர்யாவுக்கு தேடி வந்தது. எஸ்ஜே சூர்யாவை வைத்து கள்வனின் காதலி என்கிற படத்தை இயக்கிய தமிழ்வாணன் தான் அந்த படத்தை இயக்கினார். தமிழில் உயர்ந்த மனிதன் என்றும் இந்தியில் தேரா யார் ஹூம் மெயின் என்கிற பெயரிலும் இரு மொழிப் படமாக உருவாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

தற்போது வதந்தி வெப் தொடர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அந்த படம் பற்றியும் வருத்தத்துடன் குறிப்பிட்டு பேசிய எஸ்ஜே சூர்யா, “அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது இந்த சினிமாவிலேயே சாதிக்க முடியாததை சாதித்து விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. பத்து நாட்கள் அவருடன் இணைந்து படப்பிடிப்பிலும் நினைத்தேன். ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது. நான் என்னளவில் அந்த படத்தை மீண்டும் துவங்குவதற்கு எவ்வளவு முயற்சித்தும் முடியாமல் போனது. அந்த படம் கைவிடப்பட்டதுபோது நான் கதறி அழுதேன். அந்த படம் மூலமாக உலக அளவில் செல்ல வேண்டும் என்கிற என்னுடைய கனவு நொறுங்கிப் போனது. ஆனால் தற்போது இந்த வதந்தி வெப் தொடர் மூலமாக அது மீண்டும் சாத்தியமாகி உள்ளது” என்று கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டொவினோ தாமஸ் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த கிர்த்தி ஷெட்டிடொவினோ தாமஸ் படப்பிடிப்பில் ... 50வது பிறந்தநாளைக் கொண்டாடிய சுகன்யா 50வது பிறந்தநாளைக் கொண்டாடிய சுகன்யா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in