ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! | தனுஷ் படம் நின்றது ஏன்? இயக்குனர் ராம்குமார் விளக்கம் | மூன்றாம் பாலினத்தவர்கள் கடவுளின் குழந்தைகள்: ஆசிம் கெதர்பால் | வாரிசு நட்சத்திரங்களால் பல வாய்ப்புகளை இழந்தேன் ; கிர்த்தி சனோன் வேதனை | 'திரிஷ்யம் 2'வில் இடம்பெறாத கலாபவன் சாஜன் 'திரிஷ்யம் 3'ல் ரீ என்ட்ரி | நான் செட்டாகவில்லை ; அமீர்கானிடம் ஓப்பனாக கூறிய சாய் பல்லவி | கிளாமர் புகைப்படங்களைப் பகிர்ந்து அதிர்ச்சி தந்த பூஜா ஹெக்டே |

தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ள நிலையில் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். டூ பாயிண்ட் ஓ, சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், தற்போது தயாராகி வரும் இந்தியன்-2 ஆகிய படங்களுக்கு கதை, வசனத்தில் தனது பங்களிப்பை கொடுத்த ஜெயமோகன், தற்போது மலையாளத்தில் இளம் நடிகரான ஆசிப் அலி என்பவர் நடிக்கும் புதிய படத்திற்கு கதை எழுதியுள்ளார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கூமன் என்கிற படத்தின் கதாநாயகனாக நடித்தவர் தான் இந்த ஆசிப் அலி.
ஜெயமோகன் கதை எழுதும் இந்த புதிய படத்தை இயக்குவதன் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷின் மகன் ஜெகன் ஷாஜி கைலாஷ் இயக்குனராக அறிமுகமாகிறார். இதற்கு முன்னதாக தனது தந்தை இயக்கத்தில் உருவான கடுவா, காபா மற்றும் அலோன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் ஜெகன். தனது புதிய படத்திற்கான கதை விவாதத்தின்போது கதாசிரியர் ஜெயமோகன், ஹீரோ ஆசிப் அலியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார்.