‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ள நிலையில் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு அடுத்ததாக மிகப்பெரிய அளவில் ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன். டூ பாயிண்ட் ஓ, சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன், தற்போது தயாராகி வரும் இந்தியன்-2 ஆகிய படங்களுக்கு கதை, வசனத்தில் தனது பங்களிப்பை கொடுத்த ஜெயமோகன், தற்போது மலையாளத்தில் இளம் நடிகரான ஆசிப் அலி என்பவர் நடிக்கும் புதிய படத்திற்கு கதை எழுதியுள்ளார். சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கூமன் என்கிற படத்தின் கதாநாயகனாக நடித்தவர் தான் இந்த ஆசிப் அலி.
ஜெயமோகன் கதை எழுதும் இந்த புதிய படத்தை இயக்குவதன் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷின் மகன் ஜெகன் ஷாஜி கைலாஷ் இயக்குனராக அறிமுகமாகிறார். இதற்கு முன்னதாக தனது தந்தை இயக்கத்தில் உருவான கடுவா, காபா மற்றும் அலோன் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் ஜெகன். தனது புதிய படத்திற்கான கதை விவாதத்தின்போது கதாசிரியர் ஜெயமோகன், ஹீரோ ஆசிப் அலியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார்.