ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

நடிகர் பஹத் பாசில் கடந்த ஒரு ஆண்டுக்குள் மட்டுமே, தெலுங்கில் புஷ்பா, தமிழில் விக்ரம் என மலையாளம் தவிர மற்ற இரண்டு தென்னிந்திய மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, தனது ரசிகர் வட்டத்தையும் வியாபார எல்லையையும் விஸ்தரித்து உள்ளார். இதைத்தொடர்ந்து முதன்முறையாக கன்னடத்திலும் கால் பதித்துள்ள பஹத் பாசில் தற்போது தூமம் என்கிற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். லூசியா மற்றும் யு டர்ன் ஆகிய படங்களையும் இயக்கிய பவண்குமார் படத்தை இயக்கி வருகிறார். பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் தற்போது பஹத் பாசில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் கன்னடம் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட்டிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற காந்தாரா படத்தின் நாயகனும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி, பஹத் பாசில் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். இந்த சந்திப்பின்போது கேஜிஎப் படங்களுக்கு பிறகு இந்த தூமம் படத்தையும் தயாரித்து வரும் ஹோம்பலே பிக்சர்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூரும் உடன் இருந்தார்.
இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் கூறும்போது, “இரண்டு ஜென்டில்மேன்களுடன் ஒரு மகிழ்ச்சியான மாலைப்பொழுது” என்று குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தெனிந்திய சினிமாவின் திறமைகளின் பவர் ஹவுஸ்களான இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று தங்களது விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.




