சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு சூர்யா நடித்து வரும் படம் வணங்கான். இந்த படத்தில் கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார். மீனவர்கள் பிரச்னையை கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் சூர்யா மாற்றுத்திறனாளியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு தாமதம் ஆகி வந்தது.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் நடிக்க தொடங்கினார் சூர்யா. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஆகும் என்பதால் தற்போது மீண்டும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்து துவங்கும் படப்பிடிப்பை ஒரேக்கட்டமாக முடிக்க பாலா - சூர்யா இருவரும் திட்டமிட்டுள்ளனர்.