என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் படங்களுக்கு பிறகு சூர்யா நடித்து வரும் படம் வணங்கான். இந்த படத்தில் கிர்த்தி ஷெட்டி நாயகியாக நடித்து வருகிறார். மீனவர்கள் பிரச்னையை கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் சூர்யா மாற்றுத்திறனாளியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தொடங்குவதற்கு தாமதம் ஆகி வந்தது.
இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கும் தனது 42வது படத்தில் நடிக்க தொடங்கினார் சூர்யா. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்ற நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு தொடங்க காலதாமதம் ஆகும் என்பதால் தற்போது மீண்டும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்து துவங்கும் படப்பிடிப்பை ஒரேக்கட்டமாக முடிக்க பாலா - சூர்யா இருவரும் திட்டமிட்டுள்ளனர்.