சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

சிவகார்த்திகேயன் நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கிய பொன்ராம், அதையடுத்து எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கினார். இதில் சீமராஜா, எம்ஜிஆர் மகன் படங்கள் தோல்வியடைந்தன. தற்போது அவர் விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பொன்ராம் அளித்துள்ள ஒரு பேட்டியில், விரைவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ரஜினி முருகன் இரண்டாம் பாகம் குறித்து சிவகார்த்திகேயனிடம் கூறியபோது இதில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். அதனால் தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன், சூரி ஆகிய இருவருமே இரண்டு வேடங்களில் நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ், ஸ்ரீ திவ்யா நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் பொன்ராம்.