அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் நடிக்கும் அனுஷ்கா சர்மா | பிளாஷ்பேக்: மாநிலங்கள் கடந்தும் மகத்தான வெற்றியைப் பதிவு செய்த மாற்றுமொழி திரைப்படம் | தீபாவளியை குறிவைத்த கார்த்தியின் மார்ஷல் | துரந்தர் 2 படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க கோரி வழக்கு | மீண்டும் சிம்பு படத்தில் இணைந்த ‛அசுரன்' நடிகர் | மலையாளம், தெலுங்கில் கயாடு பிஸி.. ஆனால் தமிழில் மார்க்கெட்? | 'யூத்'-ஐ போல 'ஹேப்பி ராஜ்'லும் அப்பா சென்டிமென்ட் | ராதிகாவுக்கு தேசிய விருது கிடைக்குமா? பாராட்டு விழா நடத்தப்படுமா? | 4 நாட்களில் 761 கோடி வசூலித்த 'துரந்தர் 2' | கிரேட் எஸ்கேப் ஆன 'டாக்சிக்' |

சிவகார்த்திகேயன் நடிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கிய பொன்ராம், அதையடுத்து எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கினார். இதில் சீமராஜா, எம்ஜிஆர் மகன் படங்கள் தோல்வியடைந்தன. தற்போது அவர் விஜய் சேதுபதி நடிப்பில் டிஎஸ்பி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் பொன்ராம் அளித்துள்ள ஒரு பேட்டியில், விரைவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ரஜினி முருகன் இரண்டாம் பாகம் குறித்து சிவகார்த்திகேயனிடம் கூறியபோது இதில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார். அதனால் தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினி முருகன் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன், சூரி ஆகிய இருவருமே இரண்டு வேடங்களில் நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ், ஸ்ரீ திவ்யா நாயகிகளாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் பொன்ராம்.




