20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்த 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களுக்கு கதை எழுதியவர் விஜயேந்திர பிரசாத். இயக்குனர் ராஜமவுலியின் அப்பாவான விஜயேந்திர பிரசாத் தற்போது கோவாவில் நடைபெறும் 53வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் கவுரவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிறு அன்று துவங்கிய அந்த விழாவில் ஒர்க் ஷாப் ஒன்றை நடத்தினார் விஜயேந்திர பிரசாத். 'த மாஸ்டர்ஸ் ரைட்டிங் பிராசஸ்' என்ற அந்த ஒர்க் ஷாப்பில் பல சினிமா ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். அதில் விஜயேந்திர பிரசாத் பேசிய போது, “நான் கதைகளை எழுதுவதில்லை, அவற்றைத் திருடுவேன். கதைகள் உங்களைச் சுற்றியே இருக்கின்றன. ராமாயணம், மகாபாரதம் அல்லது பல நிஜ சம்பவங்கள் என பல இடங்களில் நம்மைச் சுற்றி பல கதைகள் இருக்கின்றன. அவற்றை எடுத்து அதை சுவாரசியமான கதையாக எழுதுவேன்.
நீங்கள் பொய்யை உண்மை போல சொல்ல வேண்டும். யார் பொய்யை நன்றாகச் சொல்கிறார்களோ, அவர்கள்தான் சிறந்த கதை சொல்பவர்கள். நான் கதையை எழுத மாட்டேன், அதைச் சொல்வேன். எனது மனதில் அனைத்துமே இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார்.