20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
குற்றப் பரம்பரை உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இவர் தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம், கொம்பன், ரஜினி முருகன், சேதுபதி, அண்ணாத்த உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது திரிஷா நடித்து வரும் தி ரோடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது வலைதளத்தில் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார் வேல ராமமூர்த்தி. அதில், தன்னுடைய பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, அதன்மூலம் சிலர் பொதுமக்களிடத்தில் பணம் வசூலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என் பெயரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாஸ்ட்அப் மூலம் பணம் கேட்டு யாரேனும் வசூலித்தால் தயவு செய்து யாரும் அது போன்ற நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்திருக்கிறார் வேல ராமமூர்த்தி.