எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
குற்றப் பரம்பரை உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இவர் தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம், கொம்பன், ரஜினி முருகன், சேதுபதி, அண்ணாத்த உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது திரிஷா நடித்து வரும் தி ரோடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது வலைதளத்தில் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார் வேல ராமமூர்த்தி. அதில், தன்னுடைய பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, அதன்மூலம் சிலர் பொதுமக்களிடத்தில் பணம் வசூலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என் பெயரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாஸ்ட்அப் மூலம் பணம் கேட்டு யாரேனும் வசூலித்தால் தயவு செய்து யாரும் அது போன்ற நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்திருக்கிறார் வேல ராமமூர்த்தி.