அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | 100 மில்லியன் பார்வைகளை கடந்த தனுஷின் ஹிந்தி பாடல் | வலைதள இன்ப்ளூயன்சர் வேடத்தில் அனுராக் காஷ்யப் | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நூறுசாமி | இயக்குனர் சொன்னதை கேட்டு உடல் நடுங்கி விட்டது : ஐஸ்வர்யா ராஜேஷ் | ஹாலிவுட் சண்டை கலைஞர்களுடன் பணியாற்றும் கீர்த்தி சுரேஷ் | அனிமேஷன் கேரக்டருக்கு குரல் கொடுத்தது சுவாரஸ்யம் : ஷ்ரத்தா கபூர் | பிளாஷ்பேக்: மனோரமாவை பார்த்து மிரண்டு ஓடிய தெலுங்கு நடிகைகள் |

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி, அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. இங்கே இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை வழங்கியுள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா மற்றும் வானதி கதாபாத்திரத்தில் நடித்த சோபிதா துலிபாலா ஆகியோர் சமீபத்தில் ஒன்று கூடி மீண்டும் தங்களது படப்பிடிப்பு கொண்டாட்டங்களை மீட்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்த இரண்டு புகைப்படங்களை சோபிதா துலிபாலா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் இந்த அனைவரின் முகங்கள் குளோசப்பிலும் இன்னொரு புகைப்படத்தில் இவர்கள் ஐந்து பேரின் ஒற்றை பாதங்கள் குளோசப்பிலும் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்வில் எங்கே நந்தினியை காணவில்லை என்று ஐஸ்வர்யா ராய் பற்றியே தங்களது கமெண்டுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.




