ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஷாரூக்கான். நாயகனாக மட்டுமல்லாது பல்வேறு பிசினஸ்களில் முதலீடு செய்துள்ளார். சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனம், கோல்கட்டா ஐபிஎல் அணியின் உரிமையாளர் உள்ளிட்ட பல பிசினஸ்களை செய்து வருகிறார்.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஷாரூக்கிற்கு சொந்தமான 'மன்னாத்' என்ற பெயர் கொண்ட பெரிய பங்களா ஒன்று உள்ளது. அங்குதான் ஷாரூக் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அந்த வீட்டின் முன்பு ரசிகர்கள் அடிக்கடி ரசிகர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொள்வார்கள். தற்போது அந்த வீட்டின் முகப்பில் உள்ள பெயர்ப் பலகைகள் மாற்றப்பட்டு புதிய வடிவில் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை ரசிகர்கள் 'டைமண்ட்' பெயர்ப் பலகை என அழைத்து வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக பழைய பெயர் பலகையை நீக்கிவிட்டிருந்தார்கள். அது குறித்து ரசிகர்கள் பல்வேறு விதமான தகவல்களை வெளியிட்டு வந்தார்கள். இந்நிலையில் தற்போது புத்தம் புதுப் பொலிவுடன் அந்தப் பெயர் பலகைகள் வீட்டு கேட்டின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஷாரூக் உண்மையிலேயே வைரங்களைப் பதித்துள்ளாரா அல்லது வைரங்களைப் போல் மின்னும் கற்களைப் பதித்துள்ளாரா என அவரது ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.