தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

ஆண்டுதோறும் ரீயூனியன் என்கிற பெயரில் 80-களில் முன்னணி நட்சத்திரங்களாக கோலோச்சிய நடிகர், நடிகைகள் ஒன்று கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீபத்தில்கூட இவர்களது சந்திப்பு மும்பையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் செய்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகைகளாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், பார்வதி அதிதி பாலன், பிரயாகா மார்டின் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட சிலர் சமீபத்தில் கெட் டு கெதர் என்கிற பெயரில் ஒன்றுகூடி ஜாலியாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த இளம் நடிகைகள் கொண்டாட்டத்திற்கு முன்னின்று தலைமை ஏற்று நடத்தியவர் கல்யாணியின் அம்மாவான சீனியர் நடிகை லிசி தான். இந்த சந்திப்பில் நடிகை ராதிகாவும் கலந்து கொண்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.