'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
ஆண்டுதோறும் ரீயூனியன் என்கிற பெயரில் 80-களில் முன்னணி நட்சத்திரங்களாக கோலோச்சிய நடிகர், நடிகைகள் ஒன்று கூடி கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீபத்தில்கூட இவர்களது சந்திப்பு மும்பையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் செய்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகைகளாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், பார்வதி அதிதி பாலன், பிரயாகா மார்டின் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட சிலர் சமீபத்தில் கெட் டு கெதர் என்கிற பெயரில் ஒன்றுகூடி ஜாலியாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த இளம் நடிகைகள் கொண்டாட்டத்திற்கு முன்னின்று தலைமை ஏற்று நடத்தியவர் கல்யாணியின் அம்மாவான சீனியர் நடிகை லிசி தான். இந்த சந்திப்பில் நடிகை ராதிகாவும் கலந்து கொண்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.