'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

நயன்தாராவின் பிறந்த நாளையொட்டி அவரது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரவுடி பிக்கர்ஸ் நிறுவனம். இந்த படத்திற்கு தற்காலிகமாக என்டி81 என்று வைக்கப்பட்டுள்ளது. அதாவது நயன்தாரா நடிக்கும் 81வது படம் என்று பொருள். இந்த படத்தை எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் படங்களை இயக்கிய ஆர்.எஸ்.செந்தில்குமார் இயக்குகிறார்.
இதுகுறித்து விக்னேஷ்சிவன் விடுதுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவாது: நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தனித்துவமான படங்களை கொடுத்த துரை செந்தில்குமாருடன் இணைந்ததில் மகிழ்ச்சி. நயன்தாராவின் 81வது படத்தின் கதையை அவர் கூறியபோது பார்வையாளர்களுக்கு பிடித்த பல அம்சங்கள் அதில் இருந்தது. விரைவில் இந்த படத்தில் பணியாற்றும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிக்கப்படும். என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில் ஒரு யானையின் முகத்தில் நயன்தாராவின் கை ஆதரவாக தடவிக் கொடுப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு வட்டாரத்தில் விசாரித்தபோது இதில் நயன்தாரா யானையை பராமரிப்பவராக நடிப்பதாக கூறப்படுகிறது. அவர்களின் வாழ்கை பற்றிய படமாக இருக்கலாம் என்று தெரிகிறது. யானைகளின் பாதுகாப்பிற்காக போராடும் ஒரு அனிமல் லவ்வரின் கதை என்றும் கூறப்படுகிறது.




