ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

திமுகவின் இளைஞர் அணி செயலாளராக இருந்து வரும் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏ ஆகவும் இருக்கிறார். சினிமாவிலும் நடித்து வரும் இவர் பல திரைப்படங்களை தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலமாக வாங்கி விநியோகமும் செய்கிறார். ஆனால் இப்படி மற்ற நடிகர்களின் படங்களை வாங்கி விநியோகம் செய்வதை நிறுத்தி விடலாம் என்று கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே முடிவு எடுத்தாராம் உதயநிதி.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் கூறுகையில், நான் நல்ல படங்களாக தங்களது படங்களை வாங்கி வெளியிடுமாறு கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்களின் படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறேன். ஆனால் உதயநிதி மிரட்டி படங்களை வாங்கி வருவதாக ஒரு தகவல் வெளியானது. அதையடுத்து எனது தந்தை என்னை அழைத்து, இது தேவை இல்லை என்று என்னிடத்தில் கூறினார். கெட்ட பெயர் வேண்டாம் என்று விநியோகம் செய்வதை விட்டு விடலாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் நாங்கள் இப்படி ஒரு முடிவெடுத்த நேரம், இதை கேள்விப்பட்ட கமல் சார், என் தந்தையை தொடர்பு கொண்டு, உதயநிதியை தொடர்ந்து படங்களை விநியோகம் செய்ய சொல்லுங்கள். அவர் வந்த பிறகுதான் சினிமா நன்றாக இருக்கிறது. வெளிப்படை தன்மையோடு உண்மையான கணக்குகளை கொடுக்கிறார். இது படங்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் ரொம்ப நல்ல விஷயம் கூறியிருக்கிறார். அதன் பிறகுதான் நிறைய படங்கள் இல்லாமல் குறைவான படங்களை வாங்கி விநியோகம் செய்யுமாறு என் தந்தை கூறினார். அதன் காரணமாகவே தொடர்ந்து குவாலிட்டியான நல்ல படங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறேன் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் உதயநிதி.