மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் | கதை நாயகன் ஆன இயக்குனர் ஜெகன் | கராத்தே ஹுசைனிக்கு தமிழக அரசு 5 லட்சம் உதவி | பிளாஷ்பேக்: மோசமான தோல்வியை சந்தித்த ரஜினி படம் | பிளாஷ்பேக் : கிருஷ்ணராக நடித்த நடிகை | நடிகர் விஸ்வக் சென் வீட்டில் வைர நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் திருட்டு | 'கூலி' படப்பிடிப்பு நிறைவு | கவுரி கிஷன் நடித்த வெப் சீரிஸிற்கு கீர்த்தி சுரேஷ் பாராட்டு | ராஜமவுலி படங்களுக்கு வசனம் எழுதிய பிரபல மலையாள பாடலாசிரியர் மரணம் |
கன்னடத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் சினிமாவை தாண்டி, சமூகம், அரசியல் களத்திலும் பணியாற்றி வருகிறார். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் பெங்களுரு தொகுதில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். பிரகாஷ்ராஜின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரான நடிகர்கள் அவருடன் நடிக் க மறுப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது: என் அரசியல் கருத்துகளால், என்னுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள், இப்போது நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. என்னோடு நடிக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. ஆனால், என் அரசியல் நடவடிக்கைகளும், கருத்துக்களும் அவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் விலகுகிறார்கள். அவர்களின் (ஹீரோக்கள்) விலகலால் என் தொழில் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதில் வருத்தம் இல்லை. எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். பல நடிகர்கள் அமைதி காக்கிறார்கள். அவர்களைக் குறை சொல்ல விரும்பவில்லை. என்கிறார் பிரகாஷ்ராஜ்.