ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கன்னடத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் சினிமாவை தாண்டி, சமூகம், அரசியல் களத்திலும் பணியாற்றி வருகிறார். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் பெங்களுரு தொகுதில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். பிரகாஷ்ராஜின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரான நடிகர்கள் அவருடன் நடிக் க மறுப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது: என் அரசியல் கருத்துகளால், என்னுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள், இப்போது நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. என்னோடு நடிக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. ஆனால், என் அரசியல் நடவடிக்கைகளும், கருத்துக்களும் அவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் விலகுகிறார்கள். அவர்களின் (ஹீரோக்கள்) விலகலால் என் தொழில் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதில் வருத்தம் இல்லை. எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். பல நடிகர்கள் அமைதி காக்கிறார்கள். அவர்களைக் குறை சொல்ல விரும்பவில்லை. என்கிறார் பிரகாஷ்ராஜ்.