18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! | கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி |
தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கிவிட்டு அதன் பலனை அறுவடை செய்யும் விதமாக தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. பொதுவாகவே அவரது முதல் படமான ராஜா ராணியில் இருந்து கடைசியாக இயக்கிய பிகில் வரை பெரும்பாலும் கதை திருட்டு என்கிற சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் அவர் பாலிவுட்டில் இயக்கி வரும் ஜவான் படம் எனது தயாரிப்பில் உருவான விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதையை தழுவி தான் உருவாகிறது என அதன் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இருதரப்பினரையும் அழைத்து விசாரித்த தயாரிப்பாளர் சங்கம், மாணிக்கம் நாராயணனிடம் அவர் சொல்லும் புகாருக்கு, அவர் வைத்துள்ள ஆதாரங்களை கொண்டுவந்து சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது. அதனை பரிசீலித்த பின்னரே ஜவான் படத்தின் கதை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
அதேசமயம் ஜவான் படத்திற்கும் பேரரசு படத்திற்கும் படத்தின் ஹீரோ இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது மட்டுமே ஒற்றுமை என்றும், பேரரசு படத்தில் விஜயகாந்த் போலீஸ் அதிகாரி மற்றும் ஆக்ரோச இளைஞர் என்கிற கதாபாத்திரங்களில்ல் நடித்திருந்தார். இந்த ஜவான் படத்தில் ஷாருக்கான் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார் என்பதால் இரண்டு படத்திற்கும் கதையில் ஒற்றுமை இருக்க வாய்ப்பு இல்லை என்றும் திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.