நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த 'டிஎன்ஏ' ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் பெயரை பயன்படுத்தி மோசடி நடக்கிறது: அக்ஷரா ஹாசன் புகார் | மீண்டும் நாயகனாக நடிக்கும் நாசர் | பிளாஷ்பேக்: 3 மொழிகளில் படம் இயக்கிய ஸ்ரீப்ரியா | பிளாஷ்பேக்: வாழ்க்கை முழுக்க போராடிய வசந்தகோகிலம் | ஜப்பான் ரசிகர்கள் ரசித்து மகிழும் 'விக்ரம்' | விடியற்காலையில் நடந்த அகில் அக்கினேனி திருமணம் | தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? |
தொடர்ந்து விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கிவிட்டு அதன் பலனை அறுவடை செய்யும் விதமாக தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. பொதுவாகவே அவரது முதல் படமான ராஜா ராணியில் இருந்து கடைசியாக இயக்கிய பிகில் வரை பெரும்பாலும் கதை திருட்டு என்கிற சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் அவர் பாலிவுட்டில் இயக்கி வரும் ஜவான் படம் எனது தயாரிப்பில் உருவான விஜயகாந்த் நடித்த பேரரசு படத்தின் கதையை தழுவி தான் உருவாகிறது என அதன் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இருதரப்பினரையும் அழைத்து விசாரித்த தயாரிப்பாளர் சங்கம், மாணிக்கம் நாராயணனிடம் அவர் சொல்லும் புகாருக்கு, அவர் வைத்துள்ள ஆதாரங்களை கொண்டுவந்து சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளது. அதனை பரிசீலித்த பின்னரே ஜவான் படத்தின் கதை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
அதேசமயம் ஜவான் படத்திற்கும் பேரரசு படத்திற்கும் படத்தின் ஹீரோ இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது மட்டுமே ஒற்றுமை என்றும், பேரரசு படத்தில் விஜயகாந்த் போலீஸ் அதிகாரி மற்றும் ஆக்ரோச இளைஞர் என்கிற கதாபாத்திரங்களில்ல் நடித்திருந்தார். இந்த ஜவான் படத்தில் ஷாருக்கான் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார் என்பதால் இரண்டு படத்திற்கும் கதையில் ஒற்றுமை இருக்க வாய்ப்பு இல்லை என்றும் திரையுலக வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.