கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

‛சண்டிவீரன்' படத்தை அடுத்து நடிகர் அதர்வா, இயக்குனர் சற்குணம் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛பட்டத்து அரசன்'. ஆஷிகா ரங்கநாத் நாயகியாக நடிக்க, ராஜ்கிரண், ராதிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் முதல்பார்வை வெளியிடப்பட்டது. கிராமத்து கதையில் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வந்தது. இந்நிலையில் தற்போது இந்த படம் சென்சார் சான்றே பெற்றுவிட்டது. படத்திற்கு சென்சாரில் யு சான்று கிடைத்துள்ளதாகவும், நவ., 25ல் படம் திரைக்கு வருவதாகவும் படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.