சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
‛வத்திக்குச்சி' பட இயக்குனர் கிங்ஸிலின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛டிரைவர் ஜமுனா'. பெண் கால்டாக்ஸி ஓட்டுனரின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து, ஒரேநாளில் படத்தின் கதை நடப்பது போன்று சஸ்பென்ஸ் நிறைந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் நாளை (நவ., 11) திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக படக்குழு வெளியிட்டள்ள அறிக்கை : ‛‛நவ., 11ம் தேதியன்று வெளியாவதாக இருந்த எங்கள் டிரைவர் ஜமுனா படத்தின் வெளியீட்டு தேதி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. தாமதத்திற்கு வருந்துகிறோம். மிக விரைவில் படத்தை உங்களின் பார்வைக்கு கொண்டு வர இருக்கிறோம். புதிய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். தங்களின் மேலா ஆதரவிற்கும், அன்பிற்கும் தலை வணங்குகிறோம்''.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தவாரம் வெளிவந்த படங்களில் ‛லவ் டுடே, நித்தம் ஒரு வானம்' படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் இந்தவாரமும் அந்த படங்கள் தியேட்டர்களில் தொடருகின்றன. நாளை ‛மிரள், யசோதா, பரோல்' ஆகிய படங்களுடன் ‛டிரைவர் ஜமுனா' படமும் வெளி வருவதாக இருந்தது. ஆனால் குறைந்த அளவிலான தியேட்டர்களே கிடைத்ததால் டிரைவர் ஜமுனா படத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.