தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் தனுஷ் நடிக்கும் படம் வாத்தி. தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் நவம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது. வாத்தி படம் பற்றி கடந்த சில வாரங்களாக தனுஷ் எந்த ஒரு பதிவையும், சமூக வலைத்தளங்களில் பதிவிடாமல் தவிர்த்து வந்தார். அவருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பிரச்னை என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று வாத்தி படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு பற்றி தனுஷ் டுவீட் செய்துள்ளார். அதில், "வாத்தி, படத்தின் முதல் சிங்கிள் "வா வாத்தி" 10ம் தேதி வெளியாகிறது. ஜி வி பிரகாஷ் இசையில் எனது அபிமான ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன், " எனப் பதிவிட்டுள்ளார்.
தனுஷ் பாடல் எழுதியுள்ள இந்த முதல் சிங்கிள் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. சில வாரங்களாக இந்த படத்தை பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்த தனுஷ் இப்போது டுவீட் செய்திருப்பதால் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே எழுந்த பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது.