அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி | பிளாஷ்பேக்: கலைஞர்கள் பேசாமல், பார்வையாளர்கள் பேசிய மவுனத் திரைப்படம் “பேசும்படம்” | 15 ஆண்டுகளுக்குபின் மங்கத்தா ரீ ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் போடும் திட்டம் | சென்சார் சான்றிதழ் வரலையா : டென்ஷனில் பராசக்தி, ஜனநாயகன் குழு | ஓமனில் டிரக்கிங் சென்ற பாடகி சித்ரா ஐயரின் சகோதரி உயிரிழப்பு | பாலா தயாரிப்பில் படம் இயக்கப் போகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? | இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது : இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தகவல் |

வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் தனுஷ் நடிக்கும் படம் வாத்தி. தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் நவம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது. வாத்தி படம் பற்றி கடந்த சில வாரங்களாக தனுஷ் எந்த ஒரு பதிவையும், சமூக வலைத்தளங்களில் பதிவிடாமல் தவிர்த்து வந்தார். அவருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பிரச்னை என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று வாத்தி படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு பற்றி தனுஷ் டுவீட் செய்துள்ளார். அதில், "வாத்தி, படத்தின் முதல் சிங்கிள் "வா வாத்தி" 10ம் தேதி வெளியாகிறது. ஜி வி பிரகாஷ் இசையில் எனது அபிமான ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன், " எனப் பதிவிட்டுள்ளார்.
தனுஷ் பாடல் எழுதியுள்ள இந்த முதல் சிங்கிள் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. சில வாரங்களாக இந்த படத்தை பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்த தனுஷ் இப்போது டுவீட் செய்திருப்பதால் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே எழுந்த பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது.