மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் தனுஷ் நடிக்கும் படம் வாத்தி. தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் நவம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது. வாத்தி படம் பற்றி கடந்த சில வாரங்களாக தனுஷ் எந்த ஒரு பதிவையும், சமூக வலைத்தளங்களில் பதிவிடாமல் தவிர்த்து வந்தார். அவருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பிரச்னை என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று வாத்தி படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு பற்றி தனுஷ் டுவீட் செய்துள்ளார். அதில், "வாத்தி, படத்தின் முதல் சிங்கிள் "வா வாத்தி" 10ம் தேதி வெளியாகிறது. ஜி வி பிரகாஷ் இசையில் எனது அபிமான ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன், " எனப் பதிவிட்டுள்ளார்.
தனுஷ் பாடல் எழுதியுள்ள இந்த முதல் சிங்கிள் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. சில வாரங்களாக இந்த படத்தை பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்த தனுஷ் இப்போது டுவீட் செய்திருப்பதால் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே எழுந்த பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது.




