3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா | 'டிரோல்'களுக்கு பதிலடி கொடுத்த தமன் | 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் ரஜினி - கமல் படங்கள்! | விஜய்யின் ‛லியோ' படத்தின் கதை குறித்து புதிய தகவல் வெளியானது! | ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் கேட்கும் மிஷ்கின்! | அட்லியின் குழந்தையை நேரில் பார்த்த ஷாருக்கான்! | மருத்துவமனையில் இயக்குனர் சுதா கொங்கரா! |
வெங்கி அட்லூரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் தனுஷ் நடிக்கும் படம் வாத்தி. தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் நவம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது. வாத்தி படம் பற்றி கடந்த சில வாரங்களாக தனுஷ் எந்த ஒரு பதிவையும், சமூக வலைத்தளங்களில் பதிவிடாமல் தவிர்த்து வந்தார். அவருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பிரச்னை என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று வாத்தி படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு பற்றி தனுஷ் டுவீட் செய்துள்ளார். அதில், "வாத்தி, படத்தின் முதல் சிங்கிள் "வா வாத்தி" 10ம் தேதி வெளியாகிறது. ஜி வி பிரகாஷ் இசையில் எனது அபிமான ஸ்வேதா மோகன் பாடியுள்ளார். உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன், " எனப் பதிவிட்டுள்ளார்.
தனுஷ் பாடல் எழுதியுள்ள இந்த முதல் சிங்கிள் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. சில வாரங்களாக இந்த படத்தை பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்த தனுஷ் இப்போது டுவீட் செய்திருப்பதால் அவருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே எழுந்த பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது.