இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்துள்ள 'யசோதா' படம் இந்த வாரம் நவம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷனுக்காக தனது உடல்நிலையையும் மீறி ஒரு நாளை ஒதுக்கியுள்ளார். தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் சமந்தா தெரிவித்திருந்தார். அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தாலும் 'யசோதா' படத்திற்காக அவர் புரமோஷன் செய்கிறார்.
நேற்று இது குறித்து சில புகைப்படங்களைப் பதிவிட்டு, “எனது நல்ல நண்பர் ராஜ் சொல்வது போல, நாள் எப்படியிருந்தாலும், எவ்வளவு மோசமான விஷயங்கள் இருந்தாலும், “குளி, ஷேவ், வெளிப்படுத்து” என்பதே அவருடைய குறிக்கோள். 'யசோதா' படத்தின் புரமோஷனுக்காக, நான் ஒரு நாள் கடன் வாங்கியுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவுக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து கமெண்ட்டுகளைப் பதிவிட்டுள்ளனர். அந்த ஒரு பதிவை மட்டும் 22 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.
தாங்கள் நடிக்கும் படங்கள் வெளியானால் அது பற்றி எந்த ஒரு பேட்டியோ, அந்தப் படங்களின் விழாக்களிலோ கூட கலந்து கொள்ள மறுக்கும் சில ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கு மத்தியில் தனது உடல்நலனையும் மீறி சமந்தா எடுத்துள்ள ஒரு துணிச்சலான முடிவு சினிமா உலகத்தினரையும், ரசிகர்களையும் வியக்க வைத்துள்ளது.