'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்'. இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்தை டிஜே ஞானவேல் ராஜா இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை குவித்தது. தற்போது இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு டிஜே ஞானவேலின் இயக்கத்தில் மீண்டும் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் ஞானவேல் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது.