'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்'. இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்தை டிஜே ஞானவேல் ராஜா இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. பல சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை குவித்தது. தற்போது இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு டிஜே ஞானவேலின் இயக்கத்தில் மீண்டும் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் ஞானவேல் இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது.