காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
நடிகை ஜெயலட்சுமி நான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி பணம் வசூலித்து வருகிறார் என்று பாடலாசிரியர் சினேகன் காவல் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். நான் தனியாக அறக்கட்டளை நடத்தி வருகிறேன். அதன் மூலம் பணம் பல சமூக பணிகளை செய்து வருகிறேன். சினேகன் என் புகழுக்கு களங்கம் விளைவிக்க பொய் புகார் கொடுத்துள்ளதாக ஜெயலட்சுமியும் புகார் கொடுத்தார்.
சினேகன் கொடுத்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் சினேகன். அதன்பிறகு கோர்ட் வழிகாட்டுதல்படி ஜெயலட்சுமி மீது திருமங்கலம் போலீசார் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்போது ஜெயலட்சுமி அளித்த புகாரின் பேரில் தன்னை கைது செய்யக்கூடாது என்று முன் ஜாமீன் கேட்டு சினேகன் சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சினேகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதோடு மறு உத்தரவு வரும்வரை சினேகன் திருமங்கலம் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், சாட்சிகளை கலைக்ககூடாது என்று நிபந்தனையும் விதித்து உத்தரவிட்டது.