ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
1998ல் முரளி - சுவலட்சுமி நடித்த படம் ‛தினந்தோறும்'. அப்போது வரவேற்பை பெற்ற இந்த படத்தை நாகராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பின் ‛தினந்தோறும்' நாகராஜ் என அழைக்கப்பட்டார். ஆனால் என்னசெய்வது காலத்தின் வெள்ளத்தில் நாகராஜ் திசை மாற, தொடர்ந்து படங்கள் இயக்க முடியாமல் போனது.
பின் கவுதம் மேனன் இயக்கிய மின்னலே, காக்க காக்க படங்களுக்கு வசனம் எழுதிய நாகராஜ், 2013 ஆண்டு 'மத்தாப்பு' என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்குகிறார். பெயரிடப்படாத இந்த படத்தை ‛Q' சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. சத்யா இசையமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.