''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் | துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' | முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! | 'ராஜா சாப்' படத்தில் சவாலான வேடத்தில் நடிக்கிறேன்! - மாளவிகா மோகனன் வெளியிட்ட தகவல் |
சமீபகாலமாக கன்னடத்தில் வெளியாகும் படங்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் கன்னடத்தில் கடந்த 20 வருடங்களில் 19 படங்களை இயக்கிய இயக்குனர் தயாள் பத்மநாபன் தனது 20வது படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார். கன்னடத்திலேயே படங்களை இயக்கி வந்தாலும் இவர் தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் பிறந்தவர். கொன்றால் பாவம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சந்தோஷ் பிரதாப் நடிக்கிறார்.
இது 2018ல் தயாள் பத்மநாபன் கன்னடத்தில் இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'ஆ காராள ராத்திரி' என்கிற படத்தின் ரீமேக்காக உருவாக இருக்கிறது. திரில்லராக உருவாகி இருந்த இந்த படத்தின் கதை இப்போதும் சொல்லக்கூடிய, தமிழுக்கும் பொருந்தக்கூடிய அம்சங்களைக் கொண்டதாக இருப்பதால் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்ததாக கூறுகிறார் தயாள் பத்மநாபன். அதேசமயம் தமிழுக்காக சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளதுடன் கன்னடத்தில் பெற்ற அதே வெற்றியை இங்கேயும் இந்த படம் பெற்றுத் தரும் என நம்புகிறார்.