ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
சமீபகாலமாக கன்னடத்தில் வெளியாகும் படங்கள் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் கன்னடத்தில் கடந்த 20 வருடங்களில் 19 படங்களை இயக்கிய இயக்குனர் தயாள் பத்மநாபன் தனது 20வது படத்தை தமிழில் இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார். கன்னடத்திலேயே படங்களை இயக்கி வந்தாலும் இவர் தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் பிறந்தவர். கொன்றால் பாவம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் வரலட்சுமி கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் சந்தோஷ் பிரதாப் நடிக்கிறார்.
இது 2018ல் தயாள் பத்மநாபன் கன்னடத்தில் இயக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'ஆ காராள ராத்திரி' என்கிற படத்தின் ரீமேக்காக உருவாக இருக்கிறது. திரில்லராக உருவாகி இருந்த இந்த படத்தின் கதை இப்போதும் சொல்லக்கூடிய, தமிழுக்கும் பொருந்தக்கூடிய அம்சங்களைக் கொண்டதாக இருப்பதால் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்ததாக கூறுகிறார் தயாள் பத்மநாபன். அதேசமயம் தமிழுக்காக சில மாற்றங்களை மட்டும் செய்துள்ளதுடன் கன்னடத்தில் பெற்ற அதே வெற்றியை இங்கேயும் இந்த படம் பெற்றுத் தரும் என நம்புகிறார்.