20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
இந்த ஆண்டு கோவா திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ள 3 திரைப்படங்களில் ஒன்று கிடா. இந்த தேர்வுக்கு பிறகுதான் இந்த படத்தின் பக்கம் சினிமாவின் கவனம் திரும்பி இருக்கிறது. ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். கிருமி, ரெக்க படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரா.வெங்கட் இயக்கியுள்ளார். எம்.ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தீசன் இசை அமைத்துள்ளார். பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்பட பலர் நடித்துள்ளனர்.
“மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. அதோடு வீட்டில் வளரும் ஒரு கிடாய்க்கும் அந்த குடும்பத்துக்கும் உள்ள பிணைப்பையும் சொல்லும் படம். தமிழர்களின் வாழ்வியலை அச்சு அசலாக திரையில் வடிக்கும், ஒரு மாறுபட்ட காவியமாக இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகங்களின் முயற்சியில் உருவாகியுள்ளது. இந்த கதையின் வழியே ஒரு அழகான, எளிமையான காதலும் இருக்கிறது”என்கிறார் இயக்குனர் வெங்கட்.