'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இந்த ஆண்டு கோவா திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ள 3 திரைப்படங்களில் ஒன்று கிடா. இந்த தேர்வுக்கு பிறகுதான் இந்த படத்தின் பக்கம் சினிமாவின் கவனம் திரும்பி இருக்கிறது. ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். கிருமி, ரெக்க படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரா.வெங்கட் இயக்கியுள்ளார். எம்.ஜெயபிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தீசன் இசை அமைத்துள்ளார். பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்பட பலர் நடித்துள்ளனர்.
“மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. அதோடு வீட்டில் வளரும் ஒரு கிடாய்க்கும் அந்த குடும்பத்துக்கும் உள்ள பிணைப்பையும் சொல்லும் படம். தமிழர்களின் வாழ்வியலை அச்சு அசலாக திரையில் வடிக்கும், ஒரு மாறுபட்ட காவியமாக இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகங்களின் முயற்சியில் உருவாகியுள்ளது. இந்த கதையின் வழியே ஒரு அழகான, எளிமையான காதலும் இருக்கிறது”என்கிறார் இயக்குனர் வெங்கட்.