ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார் தமன்னா. அதோடு தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்து வருகிறார். குறிப்பாக அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு சிங்கிள் பாடலுக்கு தமன்னா தான் நடனம் ஆடப்போகிறார். இந்த நிலையில் தமன்னா அளித்த ஒரு பேட்டியில், திருமணம் குறித்த கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.
அதில், ‛‛என்னுடைய பெற்றோர் திருமணம் செய்து கொள்ள சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள். எனக்கும் எல்லா பெண்களையும் போன்று திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. என்றாலும் தற்போது நான் சினிமாவில் ரொம்ப பிசியாக இருக்கிறேன். குடும்பத்தினருடன் பொழுதை கழிக்க கூட எனக்கு போதுமான நேரமில்லை. அந்த வகையில் இப்போதைக்கு எனது கவனம் எல்லாம் சினிமா மீது மட்டும்தான் உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருப்பதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது . அதனால் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்வதாக எந்த ஐடியாவும் இல்லை'' என்கிறார் தமன்னா.