ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
தமிழகமெங்கும் புகழ்பெற்ற ஓட்டல் சரவண பவன். ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சிக்கி அதற்காக சிறை தண்டனையும் அனுபவித்தார். இவரது வாழ்க்கை சினிமாவாக தயாரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்க உள்ளார். இதை ஓடிடி தளத்தில் வெளியிடும் விதமாக உருவாக்குவதாக கூறப்படுகிறதும். படத்திற்கு 'தோசா கிங்' என்று பெயரிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கதையோடு தொடர்புடைய ஜீவஜோதியின் ஒப்புதல் பெறப்பட்டு விட்டதாக தெரிகிறது.
நிச்சயமாக அண்ணாச்சியின் குடும்பம் ஒப்புதல் அளிக்காது என்றாலும் ஜீவஜோதியின் பார்வையில் இருந்து படத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஒரு பெரும் தொகை ஜீவஜோதிக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளிவரும் என்று தெரிகிறது.
ஏற்கனவே சூர்யாவை வைத்து ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.