வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வனிதாவின் போட்டோஷூட் | அசீமின் இன்னொரு முகம் : மைனா நந்தினி சொன்ன சீக்ரெட் | தன்னை கேலி செய்த நபருக்கு பொறுமையாக பதில் கொடுத்த ஜாக்குலின் | பாரதி கண்ணம்மா சீசன்2வை உறுதி செய்த இயக்குநர் பிரவீன் பென்னட்! | கல்வி நிலையங்களில் சினிமா விழாக்கள், நிறுத்தப்படுமா ? | 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா 'பதான்' ? | ரூ.100 கோடி வசூலித்த 'மாளிகப்புரம்' | 'வாத்தி' இயக்குனரின் திருமணத்தில் கீர்த்தி சுரேஷ் | இந்தியன் 2 - ஹெலிகாப்டரில் தினமும் வந்து செல்லும் கமல்ஹாசன் | 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா |
தமிழகமெங்கும் புகழ்பெற்ற ஓட்டல் சரவண பவன். ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சிக்கி அதற்காக சிறை தண்டனையும் அனுபவித்தார். இவரது வாழ்க்கை சினிமாவாக தயாரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்க உள்ளார். இதை ஓடிடி தளத்தில் வெளியிடும் விதமாக உருவாக்குவதாக கூறப்படுகிறதும். படத்திற்கு 'தோசா கிங்' என்று பெயரிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கதையோடு தொடர்புடைய ஜீவஜோதியின் ஒப்புதல் பெறப்பட்டு விட்டதாக தெரிகிறது.
நிச்சயமாக அண்ணாச்சியின் குடும்பம் ஒப்புதல் அளிக்காது என்றாலும் ஜீவஜோதியின் பார்வையில் இருந்து படத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஒரு பெரும் தொகை ஜீவஜோதிக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளிவரும் என்று தெரிகிறது.
ஏற்கனவே சூர்யாவை வைத்து ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.