என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். அடுத்ததாக அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழில் படங்களில் நடிக்காமல் இருந்த ரகுல் பிரீத் சிங் இந்தியன்-2 படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அதேசமயம் தெலுங்கிலும் கூட மிகப்பெரிய இடைவெளி விட்டுள்ள ரகுல் பிரீத் சிங் தொடர்ந்து பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல பிரபல தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரின் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் அவருடன் ரிலேஷன்ஷிப்பிலும் இருக்கிறார் என்பதும் ஏற்கனவே வெளியான செய்தி தான்.
இந்த நிலையில் பாலிவுட்டில் அடுத்ததாக எதிர்பார்க்கப்படுவது இவர்கள் இருவரின் திருமணம் தான். இதுகுறித்து அவர்கள் இருவரும் எதுவும் வாய் திறக்காத நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் இதுபற்றி கூறும்போது, ‛‛எந்த ஒரு காதல் உறவுக்கும் இனிமையான முடிவு என்பது திருமணம் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 2023ல் அவர்கள் திருமணம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் அது எப்போது என்பதை உரிய நேரம் வரும்போது ரகுல் பிரீத் சிங் தான் அறிவிப்பார்” என்று அவர் கூறியுள்ளார்.