இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறுகிறது. இந்த விருது விழாவில் அயல்நாட்டு படங்களுக்கான பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' தேர்வானது. இந்த படம் சினிமா பிலிமில் மோகம் கொண்டு அதன் கனவில் மிதக்கும் ஒரு சிறுவனை பற்றிய கதை. இதில் நடித்த சிறுவர்களில் ராகுல் கோலியும் ஒருவர்.
நாளை மறுநாள் (14ம் தேதி) இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் நடித்த 15 வயது ராகுல் கோலி புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைந்தார். ராகுலின் மரணம் குறித்து அவனது தந்தை கூறியிருப்பதாவது:
அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். படம் வெளியான பிறகு எங்கள் வாழ்க்கை மாறும் என்று அடிக்கடி என்னிடம் கூறிக்கொண்டே இருப்பான். ஆனால் அதற்கு முன்னரே அவன் எங்களை விட்டுப் பிரிந்து விட்டான். ராகுலின் சிகிச்சைக்காக என்னுடைய ஆட்டோவை விற்க இருந்தேன். ஆனால் நிலைமையை அறிந்த செல்லோ ஷோ படக்குழுவினர் எனக்கு உதவி செய்தனர்.
ராகுலை காப்பாற்ற செல்லோ படக்குழுனர் தொடர்ந்து முயற்சித்துள்ளனர். பண உதவியில் இருந்து அனைத்து உதவிகளும் செய்து வந்தனர். ஆனால் அது பலனளிக்காமல் போனது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.