இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறுகிறது. இந்த விருது விழாவில் அயல்நாட்டு படங்களுக்கான பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' தேர்வானது. இந்த படம் சினிமா பிலிமில் மோகம் கொண்டு அதன் கனவில் மிதக்கும் ஒரு சிறுவனை பற்றிய கதை. இதில் நடித்த சிறுவர்களில் ராகுல் கோலியும் ஒருவர்.
நாளை மறுநாள் (14ம் தேதி) இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் நடித்த 15 வயது ராகுல் கோலி புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைந்தார். ராகுலின் மரணம் குறித்து அவனது தந்தை கூறியிருப்பதாவது:
அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். படம் வெளியான பிறகு எங்கள் வாழ்க்கை மாறும் என்று அடிக்கடி என்னிடம் கூறிக்கொண்டே இருப்பான். ஆனால் அதற்கு முன்னரே அவன் எங்களை விட்டுப் பிரிந்து விட்டான். ராகுலின் சிகிச்சைக்காக என்னுடைய ஆட்டோவை விற்க இருந்தேன். ஆனால் நிலைமையை அறிந்த செல்லோ ஷோ படக்குழுவினர் எனக்கு உதவி செய்தனர்.
ராகுலை காப்பாற்ற செல்லோ படக்குழுனர் தொடர்ந்து முயற்சித்துள்ளனர். பண உதவியில் இருந்து அனைத்து உதவிகளும் செய்து வந்தனர். ஆனால் அது பலனளிக்காமல் போனது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.