Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எழுதிய ஒன்லைன் ஆர்டரை எடிட்டிங்கில் மாற்றிய மணிரத்னம்

12 அக், 2022 - 13:05 IST
எழுத்தின் அளவு:
Maniratnam-changed-everything-in-Editing

அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன், இயக்குனர் மணிரத்தினத்தின் மிகப்பெரிய முயற்சியால் தற்போது திரைப்படமாக வடிவெடுத்து, அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. எதிர்பார்த்தபடி இந்த படத்திற்கு தமிழக மக்கள் மிகப்பெரிய ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்த நாவலை கடந்த பல வருடங்களுக்கு முன்பிருந்தே படித்து ரசித்த அதன் வாசகர்கள் இந்த கதை எப்படி படமாக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்பதற்காகவே தியேட்டர்களுக்கு வருகிறார்கள்.

அதேசமயம் இந்த படத்தின் காட்சிகளை படமாக்கிய மணிரத்னம் எடிட்டிங் டேபிளில் அதன் ஒன்லைன் ஆர்டர் வரிசையை அப்படியே கலைத்துப்போட்டு புது வடிவம் கொடுத்தார் என்று இந்த படத்தின் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் சில புதிய தகவல்களை கூறியுள்ளார்.

அதாவது மற்ற படங்களில் வழக்கமாக இடம்பெறுவது போலவே படத்தில் உள்ள கதாநாயகர்கள், கதாநாயகிகளை வரிசையாக அறிமுகப்படுத்தும் விதமாக தான் முதலில் அவர் ஒன்லைன் ஆர்டர் எழுதி இருந்தாராம். ஆனால் அதன்பிறகு கதை துவங்கும்போதே, ஒரு கதைசொல்லியின் உதவியுடன் படத்தை துவங்க வேண்டி இருந்ததால், ஆரம்பத்தில் விக்ரமின் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தை மட்டும் முதலில் அறிமுகப்படுத்தி ஆன்லைன் ஆர்டரில் காட்சிகளின் வரிசையை மாற்றினாராம் மணிரத்னம்.

அதுமட்டுமல்ல குந்தவை கதாபாத்திரத்திற்கு என தனி அறிமுக காட்சி வைக்காமல், வந்தியத்தேவன் கதாபாத்திரம் அவரை சந்திக்கும்போது நேரடியாக அவரை அறிமுகப்படுத்துவதாகவும் மணிரத்னம் மாற்றினாராம். மேலும் இந்த கதைக்கு இடைவேளை விடுவதற்கு என எந்த ஒரு குறிப்பிட்ட காட்சியும் இல்லாததால் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தின் பிளாஷ்பேக் காட்சியில் இடைவேளை விடும் முடிவையும் எடிட்டிங்கின்போது தான் மணிரத்னம் எடுத்தார் என்றும் கூறியுள்ளார் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
வெங்கட்பிரபு நாகசைதன்யா படப்பிடிப்பில் பிரச்சனைவெங்கட்பிரபு நாகசைதன்யா ... ஆஸ்கர் பட குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம் ஆஸ்கர் பட குழந்தை நட்சத்திரம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

HoneyBee - Chittoir,இந்தியா
12 அக், 2022 - 13:25 Report Abuse
HoneyBee நாராயணா நாராயணா... இதை எல்லாம் படிக்க வச்சியே. உலகத்துக்கு தேவையான விசயம் இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in