நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர். ஹிந்தியில் அவர் கதாநாயகியாக அறிமுகமான 'குட் பை' படம் கடந்த வாரம் வெளியானது. தொடர் படப்பிடிப்புகளின் காரணமாக சற்று ஓய்வெடுக்க கடந்த வாரம் மாலத் தீவு சென்றார். அவருடன் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ஒன்றாகச் சென்றதாக செய்திகள் வெளியாகின.
மாலத்தீவில் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாவில் பகிர்ந்தார் ராஷ்மிகா. ஆனால், அவர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடியாக இருக்கும் எந்த புகைப்படத்தையும் வெளியிடவில்லை. மாறாக, விஜய் தேவரகொண்டாவின் கூலிங் கண்ணாடியை அவர் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் கிசுகிசுத்தார்கள். இருவரும் தங்களது காதலை மறுத்தாலும் ஒன்றாகவே மாலத் தீவு சென்றார்கள் என பாலிவுட் வட்டாரங்களிலும் பேச்சு எழுந்தது.
இந்நிலையில் மாலத் தீவிலிருந்து மும்பை திரும்பியிருக்கிறார் ராஷ்மிகா. அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு அதே கூலிங் கண்ணாடியை அணிந்து ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு, “மிகவும் தேவைப்பட்ட விலகி வந்தது முடிவுக்கு வந்தது. இந்த இடத்திற்கு 'குட் பை' சொல்ல வேண்டும் என்று நம்ப முடியவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகைகள் அடிக்கடி மாலத் தீவிற்கு சென்று இப்படி புகைப்படங்களைப் பதிவிடுவதால் அந்த நாட்டின் சுற்றுலாதான் வளர்கிறது. அனைத்து இந்திய சினிமா நடிகைகளும் 'ஸ்பான்சர்' சுற்றுலாவாக இதைச் செய்து வருகிறார்கள். அதற்குப் பதிலாக இந்திய சுற்றுலாத் தலங்களுக்குச் சென்று பதிவிடலாம் என்றும் சிலர் குரல் எழுப்புகிறார்கள்.