‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக விளம்பர படங்களில் நடித்தவரும் தோனி. அந்தவகையில் தோனிக்கு எப்போதுமே மீடியா மீது ஒது தனி கவனம் இருந்து வந்தது.
விரையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் விலகும் தோனி எதிர்காலத்தில் வேறு துறைகளில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார். தற்போது விளம்பரப் படங்களில் நடிப்பது மட்டுமின்றி சென்னையின் எப்.சி கால்பந்து அணி உரிமை, ஹோட்டல், ஜிம், ஷூ பிராண்ட் நிர்வகிப்பது, இயற்கை விவசாயம் செய்வது என வெவ்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் 'தோனி என்டெர்டெயின்மென்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் 'தி ரோர் ஆப் தி லயன்' என்கிற ஆவணப்படத்தைத் தயாரித்துள்ள தோனி இனி நேரடி திரைப்படங்களைத் தயாரிக்க இருக்கிறார்.
முதல் கட்டமாக தமிழ், தெலுங்கு படங்களை தயாரிக்கிறார். இதற்கு ஆயத்தமாக தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கிளையை சென்னையில் தொடங்குகிறார். தீபாவளியை முன்னிட்டு இதன் திறப்பு விழாவும், முதல் தயாரிப்பு படம் பற்றிய அறிவிப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.