இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். கிரிக்கெட் வீரர்களிலேயே அதிக விளம்பர படங்களில் நடித்தவரும் தோனி. அந்தவகையில் தோனிக்கு எப்போதுமே மீடியா மீது ஒது தனி கவனம் இருந்து வந்தது.
விரையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்தும் விலகும் தோனி எதிர்காலத்தில் வேறு துறைகளில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார். தற்போது விளம்பரப் படங்களில் நடிப்பது மட்டுமின்றி சென்னையின் எப்.சி கால்பந்து அணி உரிமை, ஹோட்டல், ஜிம், ஷூ பிராண்ட் நிர்வகிப்பது, இயற்கை விவசாயம் செய்வது என வெவ்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் 'தோனி என்டெர்டெயின்மென்ட்' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் 'தி ரோர் ஆப் தி லயன்' என்கிற ஆவணப்படத்தைத் தயாரித்துள்ள தோனி இனி நேரடி திரைப்படங்களைத் தயாரிக்க இருக்கிறார்.
முதல் கட்டமாக தமிழ், தெலுங்கு படங்களை தயாரிக்கிறார். இதற்கு ஆயத்தமாக தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கிளையை சென்னையில் தொடங்குகிறார். தீபாவளியை முன்னிட்டு இதன் திறப்பு விழாவும், முதல் தயாரிப்பு படம் பற்றிய அறிவிப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.