'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

தமிழ் இயக்குனரான அட்லீ இயக்கும் பாலிவுட் படம் ஜவான். இதில் ஷாருக்கான், தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு நடித்து வருகிறார்கள். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் மும்பை, புனே, டில்லி உள்ளிட்ட இடங்களில் வந்தது.
இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கி தொடர்ச்சியாக சென்னையில் நடந்தது. ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகி பாபு நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்து ஷாருக்கான் மும்பை திரும்பி விட்டார்.
இது குறித்து இயக்குனர் அட்லீ கூறுகையில், ‛‛சென்னையில் ஷாருக்கான் ஒரு மாதம் தங்கியிருந்தது, ஜவான் படப்பிடிப்பில் பங்கேற்றது என எதையும் நம்ப முடியாத உண்மையாக உள்ளது. இதற்காக ஷாருக்கானுக்கு நன்றி சொல்கிறேன். இத்தனை நாள் அவர் இங்கு படப்பிடிப்பில் பங்கேற்றதால் 1000 சினிமா தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்திருக்கிறது. இதற்காகவும் ஷாருக்கிற்கு நன்றி'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.




