நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தமிழ் இயக்குனரான அட்லீ இயக்கும் பாலிவுட் படம் ஜவான். இதில் ஷாருக்கான், தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு நடித்து வருகிறார்கள். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் மும்பை, புனே, டில்லி உள்ளிட்ட இடங்களில் வந்தது.
இரண்டாம்கட்ட படப்பிடிப்புகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கி தொடர்ச்சியாக சென்னையில் நடந்தது. ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகி பாபு நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிந்து ஷாருக்கான் மும்பை திரும்பி விட்டார்.
இது குறித்து இயக்குனர் அட்லீ கூறுகையில், ‛‛சென்னையில் ஷாருக்கான் ஒரு மாதம் தங்கியிருந்தது, ஜவான் படப்பிடிப்பில் பங்கேற்றது என எதையும் நம்ப முடியாத உண்மையாக உள்ளது. இதற்காக ஷாருக்கானுக்கு நன்றி சொல்கிறேன். இத்தனை நாள் அவர் இங்கு படப்பிடிப்பில் பங்கேற்றதால் 1000 சினிமா தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்திருக்கிறது. இதற்காகவும் ஷாருக்கிற்கு நன்றி'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.