கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
சின்னத்திரை பிரபலங்களான அர்ணவ் - திவ்யா ஸ்ரீதர் விவகாரம் சோஷியல் மீடியாவில் பூதாகரமாக வெடித்து பேசு பொருளாகியுள்ளது. முதல் கணவரை பிரிந்த திவ்யா, சின்னத்திரை நடிகர் அர்ணவை காதலித்து வந்த நிலையில் அவருக்காக இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்த தகவலும் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
5 வயது குழந்தையுடன் திவ்யாவை ஏற்றுக்கொண்ட அர்னவின் பரந்த மனப்பான்மையையும், திவ்யா மீதான அவரது காதலையும் பாராட்டி பலரும் அப்போது அவரை புகழ்ந்தனர். ஆனால், இப்போது திவ்யாவும், அர்னவும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி புகார் அளித்து வருகின்றனர். செல்லம்மா தொடரின் ஹீரோயின் அன்ஷிதாவுடன் அர்ணவுக்கு உறவு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள திவ்யா, இது தொடர்பான விவாதத்தில் அர்ணவ் மற்றும் அன்ஷிதா தன்னை மிரட்டுவதாகவும், அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதுகுறித்து தற்போது ஒரு பேட்டியில் பேசியுள்ள அர்ணவ், '2017 ஆம் ஆண்டு திவ்யா எனக்கு லவ் புரொபோஸ் செய்தார். அப்போது நான் ஷாக் ஆனேன். காரணம் அப்போது அவர் கணவருடன் இருந்தார். 6 மாதம் கழித்து விவகாரத்து பெற்றதாக கூறினார். ஆனால், கடந்த ஜனவரியில் தான் அவருக்கு விவகாரத்து ஆகியுள்ளது. அவர் தன் சொந்த குழந்தையையே தனது அக்கா குழந்தை என என்னிடம் சொல்லியிருந்தாள். இந்த உண்மை பிப்ரவரியில் தான் எனக்கு தெரிய வந்தது. இதை எல்லாம் கூட நான் பொறுத்துக்கொண்டேன்.
ஆனால், ரம்ஜான், பக்ரீத் என பண்டிகை நாட்களில் என் குடும்பத்தாரை பார்க்க ஊருக்கு கிளம்பினாள் தற்கொலை செய்து கொள்வேன் என என்னை மிரட்டுவார். இந்த ஹைபர் ஆக்டிவிற்காக மனநல சிகிச்சையும் எடுத்து வருகிறார். நான் கோயிலில் திருமணம் செய்தது எங்கள் வீட்டிற்கு தெரியாது. அந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் போடுவேன் என்று மிரட்டினார். என்னையும், என் குடும்பத்தையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டேன் என அவர் தான் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார்' என்று திவ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார் அர்ணவ்.
இவர்கள் இருவரில் யார் சொல்வது உண்மை? என்பது விரைவில் விசாரணையில் தெரியவரும்.