சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
விஸ்வரூபம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பாக கூறி அதற்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு ஒருவழியாக இப்போதுதான் வெளிவந்திருக்கிறது. அடுத்து ஒரு படம் இதே போன்ற கதையுடன் வருகிறது. அது "கரும்புலி". முதலில் "உயிரெழுத்து" என்ற பெயரில் தொடங்கப்பட்ட படம் இப்போது கரும்புலி ஆகியிருக்கிறது. முதலின் சென்னை தணிக்கை குழு படத்தை அனுமதிக்க மறுத்தது. மறு தணிக்கையிலும் படத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதன்பிறகு தணிக்கை குழு சொன்ன காட்சிகள் அனைத்தையும் நீக்கி விட்டு அதற்கு பதிலாக வேறு காட்சிகள் படமாக்கப்பட்டு அதனை படத்தில் சேர்த்து இப்போது தணிக்கை சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள்.
இந்தியாவை தீவிரவாதிகள் அழிக்க வருவதாகவும், அதனை ஹீரோ தடுத்து காப்பாற்றுவதாகவும் கதை. மகேஷ் என்பவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். வர்ஷா பாண்டே ஹீரோயின். "ஒரு தீவிரவாதி உண்மையான முஸ்லிம் இல்லை. ஒரு உண்மையான முஸ்லிம் தீவிரவாதியாக இருக்க மாட்டான் என்ற கருத்தைத்தான் படத்தில் சொல்லியிருக்கிறேன். தணிக்கை குழுவின் விதிகளுக்கு உட்பட்டு காட்சிகளை மாற்றி உள்ளோம். வருகிற 15ந்ந தேதி வெளிவருகிறது" என்கிறார் இயக்குனர் பரமேஷ்வர்.