22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் நடிக்கத் தொடங்கியபோது ஏற்பட்ட பிரச்சனைக்கு பிறகு சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்க முடியாத அளவுக்கு வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டிருந்தனர். அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அவர் மீதான ரெட்கார்ட் தடை நீக்கப்பட்டது. அதையடுத்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார் வடிவேலு.
லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் நடித்து முடித்துவிட்ட வடிவேலு தற்போது மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெறும் நிலையில் வருகிற நவம்பர் மாதம் இப்படம் திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு தியேட்டர் ரிலீஸ்க்கு பிறகு இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.