விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
'பொன்னியின் செல்வன்' படம் வந்த பிறகு அந்தப் படத்தில் உள்ள பல கதாபாத்திரங்களைப் பற்றியும், அதில் நடித்தவர்களைப் பற்றியும் பலரும் பேசி வருகிறார்கள். ஆனால், படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக 'குந்தவை' கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்றதும் எதிர்க் குரல்கள் எழுந்து அவரா என அதிர்ச்சி கமெண்ட்களை அளித்தவர்கள் பலர். ஆனால், அந்த எதிர்க்குரல்களை, அதிர்ச்சிகளை இப்போது பாராட்டுக் குரல்களாகவும், ஆச்சரியக் கமெண்ட்டுகளாகவும் தனது நடிப்பால் மாற்றியுள்ளார் த்ரிஷா.
20 வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மாடலிங் துறையில் நுழைந்தவர் த்ரிஷா. டிவியில் தொகுப்பாளராகப் பணியாற்றி, ஒரு படத்தில் ஒரே ஒரு காட்சியில் வந்து போனவர், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்பது சாதாரண விஷயமல்ல.
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல சூப்பர் ஹிட் படங்களிலும், பல முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தவர். ஒரு கட்டத்தில் தெலுங்கு சினிமாவை விட்டு விலகினார். தமிழிலும் சில படங்களில் மட்டுமே நடிப்பதைத் தொடர்ந்தார். 2018ல் வெளிவந்த '96' படம் அவரை 'ஜானு, ஜானு' என ரசிகர்களால் தூக்கிக் கொண்டாட வைத்தது. அதற்கு முன்பு அவர் எத்தனையோ கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் 'ஜானு' கதாபாத்திரம் மறக்க முடியாத ஒரு கதாபாத்திரமாக அமைந்தது. இந்தப்படம் இன்றோடு வெளியாகி 4 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குப் பிறகு இப்போது 'பொன்னியின் செல்வன்' படத்தின் குந்தவை கதாபாத்திரம் அமைந்துள்ளது. தமிழில் தொடர்ச்சியாகப் பேசத் தடுமாறுபவர் இப்படத்தில் சொந்தக் குரலில் அந்தக் காலத் தமிழையும் சரியாக உச்சரித்து பாராட்டப்படுகிறார். ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்தவுடன் கதாநாயகிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கும் தமிழ் சினிமா நாற்பது வயதைத் தொட்டுள்ள த்ரிஷாவுக்கு விதவிதமான கதாபாத்திரங்களைக் கொடுத்து இன்றும் இளவரசியாக அழகு பார்க்கிறது.