ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ சமீபத்தில் மரணம் அடைந்தார். இவர் நடிகர் பிரபாஸின் பெரியப்பா. பிரபாஸை சினிமாவுக்கு கொண்டு வந்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. கிருஷ்ணம் ராஜூ பிறந்த ஊரான கிழக்கு கோதாவரி மாவட்டம் மொகல்தூர் கிராமத்தில் நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. இதில் பிரபாஸ் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் தனது பெரியப்பா பெயரில் அறக்கட்டளை தொடங்குவதாகவும், முதல் கட்டமாக அந்த அறக்கட்டளைக்கு 3 கோடி ரூபாய் கொடுப்பதாகவும் பிரபாஸ் அறிவித்தார். இந்த விழாவில் பங்கேற்க வந்த நடிகையும், ஆந்திர மாநில நகர்புற வளர்ச்சிதுறை வாரிய தலைவருமான ரோஜாவும் கலந்து கொண்டார். அவர், கிருஷ்ணம் ராஜு பிறந்த இந்த ஊரில் அரசு அவருக்கு நினைவிடம் கட்ட ஏற்பாடு செய்யும், இதற்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரப்படும் என்று அறிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரபாஸ் ஒரு லட்சம் பேருக்கு விருந்து அளித்தார். பிரபாஸ் சொந்த கிராமத்திற்கு வந்ததை அறிந்து லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். போலீஸார் அவர்களை மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்தினார்கள். வீட்டின் பால்கனியில் நின்று அவர் ரசிகர்களின் அன்பை ஏற்றுக் கொண்டார்.