வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தெலுங்கு திரை உலகில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக முக்கியத்துவம் வாய்ந்த நடிகராக பயணித்து வருபவர் நடிகர் மோகன் பாபு. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மோகன் பாபு, தமிழில் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல ஒரு தயாரிப்பாளராகவும் நான்கு படங்களை தயாரித்துள்ளார். இவரது மகன் விஷ்ணு மஞ்சு தற்போது தெலுங்கு திரையுலகில் நடிகர் சங்க தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில் மோகன் பாபுவின் இந்த கலை பயணத்தை பாராட்டி கவுரவிக்கும் விதமாக மேற்கு வங்க அரசு சமீபத்தில் குடியரசு தினத்தன்று மேற்கு வங்க கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவின்போது மோகன் பாபுவுக்கு கவர்னரின் சிறப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது. கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மோகன் பாபுவுடன் அவரது மகன் விஷ்ணு மஞ்சுவும் கலந்து கொண்டார்.




