தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் | பிரபுதேவா, வடிவேலுவின் ‛பேங் பேங்' படப்பிடிப்பு நிறைவு | ஜூலை 3ல் ரிலீசாகிறது 'கட்டா குஸ்தி 2' | 4 மாத சிசுவை இழந்த நானா மற்றவர்களின் குடும்பத்தை கெடுப்பேன் : பாடகி கெனிஷா கண்ணீர் | ‛பரிமளா அண்ட் கோ' ரிலீஸ் எப்போ... : முதல் பாடல் வெளியீடு | 'மை டியர் சிஸ்டர்' ரிலீஸ் எப்போது | நெல்சனால் தள்ளிப்போகும் ஜெயிலர் 2 படம் |

தெலுங்கு திரை உலகில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேலாக முக்கியத்துவம் வாய்ந்த நடிகராக பயணித்து வருபவர் நடிகர் மோகன் பாபு. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மோகன் பாபு, தமிழில் கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல ஒரு தயாரிப்பாளராகவும் நான்கு படங்களை தயாரித்துள்ளார். இவரது மகன் விஷ்ணு மஞ்சு தற்போது தெலுங்கு திரையுலகில் நடிகர் சங்க தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில் மோகன் பாபுவின் இந்த கலை பயணத்தை பாராட்டி கவுரவிக்கும் விதமாக மேற்கு வங்க அரசு சமீபத்தில் குடியரசு தினத்தன்று மேற்கு வங்க கவர்னர் மாளிகையில் நடைபெற்ற விழாவின்போது மோகன் பாபுவுக்கு கவர்னரின் சிறப்பு விருது வழங்கி கவுரவித்துள்ளது. கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மோகன் பாபுவுடன் அவரது மகன் விஷ்ணு மஞ்சுவும் கலந்து கொண்டார்.