‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

மலையாளத்தில் ரசிகர்களிடம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கூட்டணி இயக்குனர் ஜீத்து ஜோசப்-மோகன்லால் இருவரின் கூட்டணி தான். ஏற்கனவே இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியான 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இதன் மூன்றாம் பாகமும் தற்போது விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மோகன்லால் நடித்து வரும் இன்னொரு படம் 'பேட்ரியாட்'. இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மோகன்லால், மம்முட்டி இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல இந்த படத்தில் முக்கிய வேடங்களில் பஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் இருவரும் இணைந்து நடிக்க, நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஒரு மல்டி ஸ்டார் படமாக மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி உள்ளது.
இந்த படத்தை 'விஸ்வரூபம்' எடிட்டரும், 'டேக் ஆப்' படத்தின் இயக்குனருமான மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். தற்போது இந்த படமும் அதே ஏப்ரல் மாதம் 23ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. சம்மர் விடுமுறை என்பதால் 21 நாள் இடைவெளியில் வெளியானாலும் கூட இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடையே வரவேற்பும் தேவையான வசூலும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இப்படி ஒரே மாதத்தில் இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துள்ளார்கள் என்றே தெரிகிறது.