அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
தமிழ் சினிமாவின் பெருமையாக இன்று வெளிவந்திருக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் அமைந்துள்ளதாக காலைக் காட்சிகளைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சில தெலுங்கு ஊடகங்களும், சில தெலுங்கு ரசிகர்களும் 'பொன்னியின் செல்வன்' படம் பற்றி சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ்வான கமெண்ட்டுகளைப் பரப்பி வருகின்றனர்.
ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' படத்துடன் 'பொன்னியின் செல்வன்' படத்தை ஒப்பிட்டுப் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 'பாகுபலி' படம் ஒரு கற்பனைக் கதை, அதை படமாக்குவதற்கு வசதியாக, எளிதாக எப்படி வேண்டுமானாலும் மாற்றிப் படமெடுக்கலாம். ஆனால், 'பொன்னியின் செல்வன்' படத்தின் கதை 70 வருடங்களுக்கு முன்பு கல்கி எழுத்தில் கற்பனையும், உண்மையும் கலந்து எழுதப்பட்ட வரலாற்றுக் கதை. அதை சினிமாவுக்காக எப்படி வேண்டுமானாலும் மாற்றி படமாக்க முடியாது. அந்த வித்தியாசம் கூடத் தெரியாமல் சில தெலுங்கு ரசிகர்கள் பேசி வருவதாக தமிழ் ரசிகர்கள் பதில் கொடுத்து வருகிறார்கள்.
மணிரத்னம் 'பாகுபலி' படம் போல விஎப்எக்ஸ், கிராபிக்ஸ் ஆகியவை இல்லாமல் நிஜமான இடங்களில் 'பொன்னியின் செல்வன்' படத்தை எடுத்து தன்னை ஒரு சிறந்த கிரியேட்டர் என மீண்டும் நிரூபித்துள்ளதாக தமிழ் சினிமா ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
இன்று காலை முதலே பாகுபலி, ராஜமவுலி என டுவிட்டர் டிரெண்டிங்கில் இடம் பெற்று தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மோதல் ஆரம்பமாகியுள்ளது.