ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு | “என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை |

ஹாலிவுட் சினிமாவை இந்தியா நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவர் இயக்கிய பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்கள் உலக அளவில் வெற்றி பெற்று ஆயிரம் கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது. அடுத்து அவர் ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு வந்தபோதும் இந்திய படங்களை ஹாலிவுட்டுக்கு கொண்டு செல்வதே என் இலக்கு என அறிவித்து தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கதையில் உருவாகும் இந்த படத்தின் கதை ஆப்ரிக்க காடுகள் பின்னணியில் நடைபெறும் கதையம்சம் கொண்ட இப்படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் பணிகள் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் பிரபல ஹாலிவுட் நடிகர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் ஹாலிவுட்டில் சூப்பர்ஹிட்டான ‛தோர்' மற்றும் ‛அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மகேஷ்பாபு - ராஜமவுலியின் படம் துவங்குவதற்கு முன்னரே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.