அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் | செல்பிக்காக செய்வினையா? - போலீஸ் புகாரளித்த சதீஷ் | காஸ்ட்லி கார் வாங்கிய தங்கதுரை : முதன் முதலில் என்ன செய்தார் தெரியுமா? | மாதம் 4 லட்சம் ரூபாய் இலவச சாப்பாடு தரும் நான் அரிசியில் மோசடி செய்வேனா : சந்தீப் கிஷன் விரக்தி | வீட்டு சாப்பாடு, மெத்தை கேட்ட தர்ஷனின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் |
காதல் தோல்வி காரணமாக நடிகை தீபா என்பவர் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் துணை நடிகையாக சில படங்களில் நடித்தவர் பவுலின் ஜெஸிகா எனும் தீபா. சமீபத்தில் வெளியான வாய்தா படத்தில் நாயகியாக நடித்தார். சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
போலீசார் மேற்கொண்ட முற்கட்ட விசாரணையில் தீபா ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் கைகூடாததால் தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சம்பந்தப்பட்ட அந்த நபர் ஒரு தயாரிப்பாளர் என்று கூறப்படுகிறது. மேலும் இறப்பதற்கு முன் தீபா கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.
அதில், ‛‛தான் ஒருவரை உயிருக்கு காதலித்ததாகவும், அந்த காதல் கைகூடவில்லை. அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், தனது இறப்பிற்கு யாரும் காரணமில்லை'' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளாராம்.
நடிகை தீபா பவுலின் தற்கொலை சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.