ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

'கயல்' தொடரில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர் அமுதா. பல தொடர்களில் பல கேரக்டர்களில் நடித்துள்ளார். சென்னையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் சக்தி பிரபு என்பரை சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இருவரும் சாலிகிராமத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.
அமுதாவிற்கும் அவரது கணவருக்கும் சமீபகாலமாக கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இதனால் கணவர் சக்தி பிரபு, அமுதாவை விட்டு பிரிந்து ஆவடியில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதனால் அமுதா கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. படப்பிடிப்புகளுக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த அமுதா விரக்தியின் உச்சத்தில் கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் கிருமிநாசினியை எடுத்து குடித்தார். பின்னர் தான் இப்படி ஒரு விஷயத்தை செய்துவிட்டதாக தனது தோழியும், டி.வி. நடிகையுமான கிரணுக்கு செல்போனில் தகவல் சொல்லி அழுதுள்ளார்.
இதையடுத்து கிரண், உடனடியாக சாலிகிராமம் விரைந்து சென்று அமுதாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அமுதா தான் தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் திண்டலில் இருப்பதாகவும், நான் தற்கொலை முயற்சி செய்ததாக வரும் தகவல்களில் உண்மை இல்லை என்றும் கூறியுள்ளார்.
'அமுதா தற்கொலைக்கு முயன்றுள்ளார், அவரது நண்பர்கள் அவரை மருத்துமனையில் சேர்த்து குணமாக்கி உள்ளனர். தற்போது போலீஸ் விசாரணைக்கு பயந்து சொந்த ஊர் சென்று விட்டார். என்றாலும் அவர் மீது தற்கொலை முயற்சி பதிவு செய்யப்படும்' என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.