Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குந்தவையை கவனிப்பதில் பிஸி: சேந்தன் அமுதன் வருத்தம்

23 அக், 2022 - 11:10 IST
எழுத்தின் அளவு:
ponniyin-selvan-senthan-amuthan-reacts-kundavai

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படம் பற்றி சமூக வலைத்தளங்களில் இன்னமும் பல விமர்சனங்கள், கருத்துக்கள், தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தாங்கள் பார்த்து ரசித்தவை, நாவலில் உள்ளது படத்தில் இல்லாதது, படத்தில் பலரும் கவனிக்கத் தவறியது என விதவிதமாக பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

அந்த விதத்தில் படத்தில் குந்தவையை முதன் முதலில் சந்திக்க, சேந்தன் அமுதனுடன் வந்தியத் தேவன் செல்லும் காட்சியில், குந்தவை, சேந்தன் அமுதன், செம்பியன் மாதேவி ஆகிய மூவரும் இருக்கும் ஒரு புகைப்படத்தை ரசிகர் ஒருவர் பதிவிட்டு, “இப்படியான சின்ன டீடெய்லிங்கைக் கூட தியேட்டரில் படம் பார்க்கும் போது நான் கவனிக்கவில்லை,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

செம்பியன் மாதேவியன் மகன்தான் சேந்தன் அமுதன். ஆனால், அரண்மனையில் வசிக்காமல் சிவபெருமானுக்குச் சேவை செய்பவராக இருக்கிறார். அவர் சோழ வாரிசு என்பது கதைப்படி பின்னர்தான் தெரிய வரும். படத்தில் குந்தவையின் அறிமுகக் காட்சியில் அவருக்கு அருகில் அமர்ந்திருக்கும் செம்பியன் மாதேவி, சேந்தன் அமுதன் ஒருவருக்கொருவர் பாசத்துடன் பார்த்துக் கொள்வது இடம் பெற்றிருக்கும். படம் பார்க்கும் போது அந்த டீடெய்லிங்கைப் பலரும் கவனித்திருக்க மாட்டார்கள்.

ரசிகர் குறிப்பிட்ட அந்த டீடெய்லிங் பற்றிய பதிவை சேந்தன் அமுதன் ஆக நடித்துள்ள அஷ்வின் பகிர்ந்து ''யாரும் இதை கவனிக்கவில்லை. எல்லோரும் குந்தவையை கவனிப்பதிலேயே பிஸியாக இருந்ததே இதற்குக் காரணம்,” எனக் குறிப்பிட்டிருந்தார். அஷ்வினின் பதிவிற்கு குந்தவை ஆக நடித்திருக்கும் திரிஷா, “நான் கவனித்தேன்,” என பதில் கொடுத்திருக்கிறார்.

பல ரசிகர்கள் அந்த டீடெய்லிங் என்ன என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நேரம் பலரும் கூகுள் செய்து யார் சேந்தன் அமுதன் என தேடிப் படித்திருப்பார்கள். சேந்தன் அமுதன்தான் பிற்காலத்தில் உத்தம சோழனாக 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவருக்குப் பிறகுதான் ராஜராஜன் ஆக பெயர் பெற்ற அருள்மொழி வர்மன் சோழ தேசத்தை ஆட்சி செய்தார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நவ., 4ல் வெளியாகும் ‛நித்தம் ஒரு வானம்'நவ., 4ல் வெளியாகும் ‛நித்தம் ஒரு ... ராஷ்மிகா மந்தனா விடாமல் தொடரும் பண்டிகை சென்டிமென்ட் ராஷ்மிகா மந்தனா விடாமல் தொடரும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

naadodi - Dallas,யூ.எஸ்.ஏ
25 அக், 2022 - 03:12 Report Abuse
naadodi பொன்னியின் செல்வன் நாவல் புதிதல்ல.. இந்த நிகழ்வு அதனைப் படித்தவர்களுக்கு தெரியும், புரியும். எனவே தினமலர் செய்தது தவறே இல்லை.
Rate this:
Riya - ,
23 அக், 2022 - 17:39 Report Abuse
Riya வரப் போகும் படத்தோட கிளைமாக்ஸ் -ஐ, முதலிலேயே கூறுவது சரியோ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in