ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா என்கிற படத்தின் முதல் பாகம் வெளியானது. இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீவள்ளி என்கிற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராஷ்மிகா மந்தனா. இந்த படம் வெளியான பிறகு இந்த படத்தில் அவர் சாமி சாமி என்கிற பாடலுக்கு ஆடிய நடனம் தெலுங்கில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பலரையும் ஈர்த்து விட்டது. மேலும் பல மாநிலங்களிலிருந்தும் இந்த பாடலுக்கு குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை பலரும் நடனமாடி சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வரும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்த ராஷ்மிகா மந்தனா அணிந்திருந்த சேலை போன்றே தற்போது ஜெய்ப்பூர் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது ஸ்ரீவள்ளி சேலைகள் என்றே அவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வட மாநிலத்தில் ஸ்ரீவள்ளி என்கிற பெயரில் சேலைகள் உருவாகும் அளவுக்கு புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ராஷ்மிகா ஏற்படுத்தி உள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.